செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அடகு வைக்கப்பட்ட தாலிசங்கிலி; ஆத்திரத்தால் கணவர் குத்திக் கொலை!

Sep 29, 2020 05:51:30 PM

கோவையில் அடகு வைக்கப்பட்ட தாலியை மீட்டு தராத கணவரை காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின் பிரிட்டோ. தற்போது, 35 வயதான இவர் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் கரோலின் (31)என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் பிராங்ளின் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதோடு, தன் மனைவியின் தாலிச் செயினை பிராங்ளின் அடகு வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக , இன்று கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடகு வைத்த நகையை மீட்டு தர வேண்டுமென்று கரோலின் கணவரிடத்தில் சண்டை போட்டுள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் கணவர் பிராங்ளினை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பிறகு, காய்கறி வெட்டும் போது, கத்தி தெரியாமல் பட்டு விட்டதாக பிராங்ளினை கரோலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், ஏற்கெனவே பிராங்ளின் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கரோலின் கோபத்தில் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

மேலும், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, காய்கறி வெட்டும் போது, தெரியாமல் தன் கணவர் மீது தெரியாமல் கத்தி பட்டு விட்டதாக கரோலின் நாடகமாடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இது தொடர்பாக வெரைட்டி ஹால் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement