செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சிப் பணி... தமிழர் பெருமை வெளியாகுமா?

Sep 10, 2020 11:21:05 AM

ரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கை கொண்ட சோழபுரம். சோழப் பேரரசன் ராஜேந்திரன் காலத்தில் குமரியிலிருந்து கங்கை நதி வரையிலான நிலப் பரப்புகள் மட்டுமல்லாமல் கீழை நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் அனைத்துக்கும் தலைநகராக இருந்த பெருமை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு உண்டு. பிற்கால சோழர் சரித்திரத்தில் 250 ஆண்டுகளுக்கு மேல் சோழ வேந்தர்களின் தலைநகராகக் கோலோச்சியது கங்கைகொண்ட சோழபுரம்.

ஆனால், காலசுழற்சியில் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த மாட, மாளிகைகள் அனைத்தும் அழிந்து விட,  ராஜேந்திரனின் கங்கைப் படையெடுப்பின் வெற்றியைப் பறைசாற்றும் கங்கைகொண்ட சோழீச்சரம் திருக்கோயில் மற்றும் சோழகங்கம் எனும் பேரேரி மட்டுமே எஞ்சியுள்ளன. சோழ மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் மாளிகைகள் இருந்த இடம் அழிந்து போய் விட்டன. இப்போது அந்த பகுதிய ‘மாளிகைமேடு’ என்று அழைக்கப்படுகிறது.

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விரிவான அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதைப் போல கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டிலும் உரிய அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரனும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மாளிகை மேட்டில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்பட்சத்தில் சோழர் காலத்தில் தமிழர் கொண்டிருந்த பண்பாட்டு, கலாசார தொன்மை உலகுக்குத் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement