செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உழவர் உதவித்தொகை முறைகேடு.. தமிழகம் முழுவதும் விசாரணை தீவிரம்..!

Sep 08, 2020 10:26:53 AM

உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், பல்லாயிரக்கணக்கானோர் முறைகேடாக பணம் பெற்றது தொடர்பாக தமிழகம் முழுவதும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் பயன்பெற இணைய வழியில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இடைத்தரகர்கள் சிலர், அதிகாரிகளின் உதவியுடன் விவசாயிகள் அல்லாதோரை இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், அஜித், முகிலன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகரன், தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் சுமதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற 14 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், இரண்டு தனியார் கணினி சேவை மைய உரிமையாளர்களான ராகுல் மற்றும் கலையரசனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் போலியான கணக்கு மூலம் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், 6 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து நிதியுதவி 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.


Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement