செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

இறைச்சி கடைகள், மீன் சந்தைகளில் அலைமோதிய கூட்டம்

Sep 06, 2020 06:45:19 PM

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அமலில் இருந்த தளர்வில்லா முழு ஊரடங்கு  முடிவுக்கு வந்ததையடுத்து, இறைச்சி, காய்கறி கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் கூட்டம் அலைமோதியது.  

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கடந்த மாதத்துடன் இந்த முறை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அனைத்து வகை கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் காலை முதல் இறைச்சி கடைகளிலும், மீன் விற்பனை கடைகளிலும் குவிந்தனர்.

 

காசிமேடு பகுதியில் அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்தனர். அரசு வழிகாட்டுதல்களை காற்றில் பறக்கவிட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசங்கள் அணியாமலும் பொதுமக்கள் மீன்களை பேரம்பேசி வாங்கிச் சென்றனர். புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டி இறைச்சி சந்தையிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலைகளில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது.

 

சென்னையின் முக்கிய வணிகபகுதிகளில் ஒன்றான தியாகராயநகரிலும் வணிகவளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. 

 

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. திருச்சி ஸ்ரீரெங்கம் கோயில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் இன்று ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தினர்.

பழனியிலுள்ள புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயம் முன்பு கட்டங்கள் வரையப்பட்டு, அதனுள் போடப்பட்ட சேரில் கிறிஸ்தவர்கள் அமர்ந்து பிரார்த்தனை நடத்தினர். 

சேலம் அஸ்தம்பட்டி மற்றும் சூரமங்கலம் அன்னதானபட்டி பகுதியில் உள்ள உழவர் சந்தைகளில்  மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.  இதேபோல் அஸ்தம்பட்டி, சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு வந்திருந்த பலர் முக கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.  

சேலம் அஸ்தம்பட்டி மற்றும் சூரமங்கலம் அன்னதானபட்டி பகுதியில் உள்ள உழவர் சந்தைகளில்  மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.  இதேபோல் அஸ்தம்பட்டி, சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு வந்திருந்த பலர் முக கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.  

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக தரையில் வரையப்பட்ட கட்டங்களுக்குள் நீண்ட தூரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

இதேபோல் புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. தேவாலயம் முன்பு கட்டங்கள் வரையப்பட்டு, அதனுள் போடப்பட்ட சேரில் கிறிஸ்தவர்கள் அமர்ந்து பிரார்த்தனை நடத்தினர்

மதுரையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. சமூக இடைவெளியும் பொதுவாக காணப்படவில்லை. இதேபோல் வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்டவைகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.முக்கிய சாலைகளிலும்  வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கிறிஸ்தவர்கள் முகக்கவசம் அணிந்த நிலையில் பிரார்த்தனை நடத்தினர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement