செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உழவர் பாதுகாப்புத் திட்ட மோசடி... விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை

Sep 05, 2020 07:56:41 PM

பிரதமரின் உழவர் பாதுகாப்புத் திட்ட மோசடி குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதில்  கடலூர் மாவட்டத்தில் 8 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் ,கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத சுமார் 37 ஆயிரம் பேர் பயனடைந்தது ஆய்வில் தெரியவந்தது. அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இதுவரை நான்கரை கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேளாண்துறையில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக 3 பேரையும் பணியில் திறமையில்லாதவர்கள் என 10 ஒப்பந்த ஊழியர்களையும் மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்துள்ளார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் களமிறக்கப்பட்டு விஜயநகரம் பகுதியில் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேளாண் துறை மற்றும் கணினி மையங்களைச் சேர்ந்த 8 பேரை கடலூர் அலுவலகம் அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முறைகேடாகப் பயனடைந்த 340 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார். போலியான ஆவணங்கள் கொடுத்த அனைவரிடம் இருந்தும் பணத்தை திரும்ப வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 88 பேர் போலியான ஆவணங்களைக் கொடுத்து திட்டத்தில் பயனடைந்தது தெரியவந்தது. அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி இதுவரை 26 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வருவாய்த்துறை சார்பில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, கிராமம் கிராமமாக நேரடியாகவும் சென்று பணத்தை வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

கரூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் முதற்கட்டமாக 1500 பேர் போலியான பயனாளிகள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இதுவரை 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement