செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

”முதலிரவு தினத்திலேயே சந்தேகம்’ - விரிவுரையாளர் டார்ச்சரால் ஒரே வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்!

Sep 02, 2020 04:47:35 PM

முதல் இரவின்போதே மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுக் கொடுமைப்படுத்தியதால், திருமணமான ஒரு வாரத்துக்குள் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வேலுரில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ரெட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரலேகா. இவருக்கும் காட்பாடி அருகே உள்ள பிரம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் கடந்த மாதம் ஆகஸ்ட் 23 - ம் தேதி திருமணம் நடைபெற்றது. பாலாஜி, சேலம் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 30 - ம் தேதி குளியலறையில் சந்திரலேகா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சந்திரலேகாவின் குடும்பத்தின் காவல் நிலையத்தில் புகார் அளித்தனன் பேரில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில், சந்திரலேகாவின் அறையில் அவரது பெற்றோர் சோதனை மேற்கொண்ட போது சந்திரலேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், “எனது கணவர் பாலாஜி முதலிரவு அன்றே என்மீது சந்தேகப்பட்டார்.. நீ இவ்ளோ அழகா இருக்கியே உன்னை யாரும் இதுவரை காதலித்ததில்லையா, நீ யாரையாவது காதலித்து இருக்காயா, என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார். என்னை விட்டுவிட்டு காதலித்த பையன்கூட ஓடி விடுவாயா என்று கேட்கிறார். அசிங்கமாகப் பேசி ஒவ்வொரு நாளும் என்னைக் கொடுமைப் படுத்துகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் கூட,  திருமணத்துக்கு முன்பான வாழ்க்கையை சந்தேகப்படுகிறார். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் இவரோடு என்னால் வாழ முடியாது. நான் சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டேன். ஆனால், நான் நினைத்தபடி எனது திருமண வாழ்க்கை அமையவில்லை. அதனால் நான் உங்களை விட்டுப் பிரிகிறேன். தங்கைகளுக்காகவாவது நல்ல மாப்பிள்ளையைப் பாருங்கள்” என்று கைப்பட எழுதியுள்ளார் சந்திரலேகா.

திருமணமான ஒரு வாரத்திலேயே புதுப்பெண் சந்தேகம் தாங்கமுடியாமல், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!


Advertisement
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
தேனி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறை சோதனை
கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம்
தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கும் விழா
ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement