செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தாமதமான கடன் தவணை அதிகரித்த வட்டி - தீக்குளித்த வாடிக்கையாளர்

Aug 29, 2020 06:18:53 PM

தஞ்சாவூரை அடுத்த வல்லத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். வெளிநாட்டில் வெல்டர் வேலை செய்து ஊர் திரும்பியவர் சொந்த வீடு கட்ட எண்ணி சிட்டி யூனியன் வங்கியில் 9 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

மாதா மாதம் வங்கி நிர்ணயித்த தேதிகளில் தவணைத் தொகையை கட்ட முடியாமல் கையில் கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வங்கியில் கட்டி வந்துள்ளார் ஆனந்த்.

தவறிய தவணைகள் ஒவ்வொன்றுக்கும் வட்டி ஏறி, அவர் கட்டிய 13 லட்ச ரூபாயில் 3 லட்ச ரூபாய் மட்டுமே அசல் கணக்கிலும் மீதமுள்ள 10 லட்ச ரூபாய் வட்டிக் கணக்கிலுமே சேர்ந்திருக்கிறது.

எனவே கடனாக வாங்கிய 9 லட்ச ரூபாயில் 3 லட்ச ரூபாய் போக மீதமுள்ள 6 லட்ச ரூபாயை கட்டுமாறும் இல்லையென்றால் வீடு ஏலத்துக்கு விடப்படும் என்றும் வங்கித் தரப்பில் கூறியுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக வருவாய் இல்லாததால் அவகாசம் கொடுக்குமாறு கேட்ட ஆனந்திடம், அவகாசம் கொடுத்தால் மேலும் வட்டி அதிகரிக்கும் என வங்கி நிர்வாகம் கூறியதாகத் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து வங்கிக்கு வெளியே வந்த ஆனந்த், யாரும் எதிர்பாராத வகையில் தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலைப் பிடித்து உடம்பில் ஊற்றி பற்றவைத்துக் கொண்டுள்ளார்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பேசிய ஆனந்த், தனது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடாமல் எப்படியாது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.

90 விழுக்காடு காயமடைந்த ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வங்கித் தரப்பில் கேட்டபோது, விதிகளுக்கு உட்பட்டே தாங்கள் நடந்துகொண்டதாகவும் கூடுதலாக ஆன்ந்திடம் அபராதமோ, வட்டியோ கேட்கவில்லை என்றும் கூறினர்.

 

 


Advertisement
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்
கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்பு..!
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது
வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?
இஸ்திரி பெட்டி மூலம் துணிகளை தேய்த்து கொண்டிருந்த மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டு உற்சாக நடனம்
மதுரையில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழை - ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement