செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

' என் தாய்க்கு கடைசி வரை இழப்பீடு கிடைக்கவில்லை!' - ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி வருத்தம்

Jul 18, 2020 01:29:06 PM

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தில் நேற்று அவருக்கு கடைசி வேலை நாள். பிரிவுபசார விழாவில் நேற்று காணோலியில் பானுமதி உரையாற்றினார். அப்போது, '' எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது என் தந்தையை பேருந்து விபத்தில் இழந்தேன். என் தாயார் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக உத்தரவிட்டாலும் நடைமுறை சிக்கல்கள் , குழப்பமான நடைமுறைகள், முறையான உதவி கிடைக்காததால் எங்களால் இழப்பீட்டை பெற முடியவில்லை.

என்னுடைய தாயார், நான் எனது இரு சகோதரிகள் கூட நீதிமன்ற நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான். இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நேற்று வரை எங்களுக்கு அந்த இழப்பீடு கிடைக்கவில்லை என்பதுதான். நீதித்துறை பணியை பொறுத்த வரை மலையளவு தடைகளை எதிர்கொண்டுள்ளேன் . நீதித்துறையை வலுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் போதுமானளவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன '' என்றார்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக மூன்று பெண் நீதிபதிகள் இப்போது பணியாற்றி வந்தனர். பானுமதி தவிர இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் பெண் நீதிபதிகள். தற்போது உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் எண்ணிக்கை இரண்டாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பானுமதி 1988-ம் ஆண்டு செசன்சு நீதிபதியாக பணியை தொடங்கினார். 30 ஆண்டுகள் நீதித்துறையுடன் இணைந்து பணியாற்றிய பானுமதி 2003- ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார். தொடர்ந்து 2014- ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் 6- வது பெண் நீதிபதி இவர். உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெற்ற இரண்டாவது பெண் நீதிபதி பானுமதி. முன்னதாக, நீதிபதி ரூமா பால் கொலிஜியத்தில் இடம் பெற்றிருந்தார். 2006- ம் ஆண்டு ரூமாபால் ஓய்வு பெற்றார்.

தமிழகத்தை அதிரவைத்த பிரேமனந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி இவர்தான். அப்போது, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக பானுமதி இருந்தார். இந்தியாவே அதிர்ந்த நிர்பயா வழக்கில் ஆர். பானுமதி தலைமையிலான அமர்வுதான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதித்தது.


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement