செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மத்திய குழுவினர்.. சென்னையில் ஆய்வு..!

Jul 09, 2020 05:04:41 PM

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்திய குழுவினர், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் நிலவிவரும் கொரோனா பாதிப்பு குறித்தும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் புதன்கிழமை தமிழகம் வந்தனர்.

இந்நிலையில் இன்று ஆய்வை தொடங்குவதற்கு முன்பாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 

அதன் பின்னர் புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்திலும், புளியந்தோப்பு காய்ச்சல் முகாமிலும் ஆய்வு செய்தனர். ஐ.சி.எம்.ஆர். வழிமுறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதா  என்றும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து சூளையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் எப்படி பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

இதையடுத்து கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர், பரிசோதனை முறைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதன் தொடர்ச்சியாக அதிநவீன வசதிகளுடன் கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரசு கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீவிர சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஏற்கனவே இரு முறை ஆய்வு நடத்தியுள்ள மத்திய குழுவினர், தற்போது 3வது முறையாக ஆய்வு நடத்துவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement