செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அடி தாங்காமல் விஷம் குடித்த இளைஞர்; 'திடீர்' டாக்டர்களான போலீஸார்! ஊர்க்காவல் படை வீரர் மீதும் புகார்

Jul 07, 2020 02:13:07 PM

திருச்சி மாவட்டம் துறையூர் கொல்லம்பட்டியை சேர்ந்த இளைஞர் ரகுநாத். கேரளாவில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா லாக்டௌன் காரணமாக,  சொந்த ஊர் திரும்பியுள்ளார். கடந்த ஜூன் 5- ந் தேதி, வியாபாரிகளை மிரட்டியதாக ரகுநாத்தை துறையூர் போலீஸார் பிடித்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து சராமரியாக தாக்கியுள்ளனர்.. வலியால் துடித்த ரகுநாத் போலீஸ் நிலையத்தில் இருந்த ஆல் அவுட் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். 

விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்று பயந்த போலீஸார், அவர்களே மருத்துவர்களாகியுள்ளனர். ரகுநாத்துக்கு உப்பு , சோப்பு கலந்த கரைசலை கொடுத்து விஷத்தை வாந்தி எடுக்க வைத்துள்ளனர். பின்னர், ரகுநாத்தின் உடல் நிலை மோசமடைந்ததால் வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் விஷயம் வெளியே தெரிந்து விடுமென்பதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்துள்ளனர். ரகுநாத்தின் உடல் நிலை தேறியதும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஜூன் 27- ந் தேதி ஜாமீனில் வெளிவந்த ரகுநாத் , தன்னை  தாக்கியதாக துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் உள்ளிட்ட போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சுப்பரமணியம் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு டி.ஜி.பி மற்றும் ஐ.ஜி. டி.ஐ.ஜி ஆகியோருக்கு ரகுநாத் புகாரளித்துள்ளார். ஏற்கனவே, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் , ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மீதும் புகார் சொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரகுநாத்திடம் பேசிய போது, '' கேரளாவில் கூலி வேலை பார்த்தேன். கொரோனா என்பதால் சொந்த ஊர் திரும்பி விவசாயத்துல ஈடுபட்டேன். ஜூன் 5-ந் தேதி வீட்டுக்கு வெளியே படுத்திருந்தேன். இரவு 2 மணிக்கு துறையூர் போலீஸ்காரர் என்னை வந்து எழுப்பினார். என்னை சட்டையை பிடித்து இழுத்து ஜீப்பில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அடுத்த நாள் காலை இன்ஸ்பெக்டர் குருநாதன் கண் முடித்தனமாக அடித்தார். ஊர்க்காவல் படை வீரர் சுப்ரமணியத்தோட தூண்டுதல் பேரில்தான் என்னை பிடிச்சுடடு போனாங்க. அவரோட பெயரை சொல்லிதான் என்னையும் அடிச்சாங்க. என்னோட சாதியையும் தரக்குறைவாக பேசினர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் போலீஸ் நிலையத்தில் இருந்த ஆல் அவுட் பாட்டிலில் இருந்த விஷத்தை எடுத்து குடிச்சிட்டேன். 

பக்கத்துல இருந்த இன்னோருத்தரு  நான் விஷம் குடிச்சதை போய் போலீஸ்காரங்கட்ட சொன்னார். சிகிச்சைக்கு பிறகு, துறையூர் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தினர். அதுக்கு முன்னாடி , 'நீதிபதிட்ட போலீஸ்காரங்க அடிச்சாங்களானு கேட்டா இல்லனு சொல்லனும்' னு மிரட்டினாங்க. அதனால், அவங்ககிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு நாங்களும் ஜட்ஜ் கேட்ட போது, இல்லனு சொல்லிட்டோம். இப்போ எங்க மேல , கூட்டுக் கொள்ளையில் ஈடுபட ஆயுதங்கள் வச்சிட்டு பதுங்கியிருந்ததாக வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க. என்னை பார்த்து ' குண்டர் சட்டத்தில் உன்னை உள்ளே தள்ளாம விட மாட்டோம்' போலீஸ்காரங்க மிரட்டினாங்க. பின்னர் சிறையிலிருந்த எனக்கு ஜூன் 27 - ந்தேதி ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்தவுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம்'' என்றார்.

இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் பேசிய போது, இன்ஸ்பெக்டர் குருநாதன் விடுமுறையில் இருப்பதால் அவரின் செல்போன் ஸ்விட்ச் - ஆப் செய்யப்பட்டுள்ளது என்று அங்கிருந்த பெண் காவலர் தெரிவித்தார். தற்போது துறையூர் போலீஸ் நிலைய பொறுப்பாளரான  சப் -இன்ஸ்பெக்டர் ராஜாவிடத்தில் இந்த சம்பவம் குறித்து கேட்ட போது, ''குற்றம் சாட்டப்பட்ட ரகுநாத் மீது கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து வியாபாரிகளை மிரட்டியதாக புகார் வந்தது. அதனால் வழக்குப்பதிவு செய்து விசாரித்தோம். மற்றபடி, ரகுநாத் சொல்வது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை '' என்று மறுத்தார். 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement