செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள எடைக்கற்கள், நீள்வடிவ பச்சை வண்ண பாசிகள்

Jul 04, 2020 03:18:19 PM

கீழடி அகழாய்வில் எடைக்கற்களும், அகரம் அகழ்வாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

6ஆம் கட்ட அகழாய்வு, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி, தற்போது கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில், இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலையாக இருந்தது என கருதப்படும் நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி, மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை தொழில் கூடம் செயல்பட்டதற்கு ஆதாரமாக திகழ்கிறது. இதேபோல, பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடைக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அடிப்பகுதி தட்டையாக, உருளை  வடிவில் அமைந்துள்ள இந்த எடைக்கற்கள் முறேயே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதியில் வணிகம் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது. அதே போன்று அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாய்வு நடைபெற்று வருகின்றன.

அகரத்தில் நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக நீள்வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வகை பாசிகளை வியாபாரிகள், செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இதுபோன்ற பாசிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன என்றும் தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement