செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கதறி அழுத வாட்ஸ்ஆப் போராளி..!

Jul 04, 2020 02:50:15 PM

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சரிவர கவனிக்கப்படுவதில்லை என வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஒருவர் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோவில் பதிவான பெண் ஒருவர், தனது அனுமதியின்றி தன்னை படமெடுத்துவிட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து அந்த நபருக்கு போலீசார் சம்மன் அனுப்பவே, தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாக அழுது புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளார். 

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கண்ணன் என்பவர் 3 நாட்களுக்கு முன் தனது மனைவியை கொரோனா பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஊழியர்கள் நோயாளிகளை சரிவர கவனிப்பது இல்லை, வார்டில் செவிலியர்கள் இல்லை எனக் கூறியவாறு கொரோனா வார்டை வளைத்து, வளைத்து வீடியோ எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரும் அவரது 6 வயது மதிக்கத்தக்க மகனும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களையும் தனது வீடியோவில் பதிவு செய்த ஸ்ரீராம் கண்ணன், சமூக அக்கறையோடு “அவர்களை ஏன் வெளியே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள், உடனடியாக சிகிச்சை அளியுங்கள்” என மருத்துவமனை ஊழியர்களிடம் புரட்சி பேசியுள்ளார்.

பிறகு தனது மனைவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தவர், உடனடியாக தாம் எடுத்த வீடியோவை வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். கடந்த 3 நாட்களில் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ, வீடியோவில் மகனுடன் பதிவான அந்தப் பெண்ணுக்கு சிக்கல் உருவாகி இருக்கிறது.

வீடியோவைப் பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் பல ஊர்களில் இருந்து அவரை போனில் அழைத்து நலம் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் இருந்து ஸ்ரீராம் கண்ணனுக்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போன் மூலமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனால் பயந்துபோன ஸ்ரீராம் கண்ணன் தாம் வீடியோ எடுத்து பதிவிட்டது தவறுதான், தன்னை ஒன்றும் செய்துவிட வேண்டாம் எனக் கெஞ்சி அழுதவாறு மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல் தீவிரமாகியுள்ள தற்போதைய சூழலில் தங்கள் உயிரையும் குடும்பத்துடனான பிரிவையும் பொருட்படுத்தாமல் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் மருத்துவமனையின் செயல்பாடுகளில் குறைகள் ஏதேனும் இருப்பின், முறைப்படி உயர் அதிகாரிகளையோ, மாவட்ட நிர்வாகத்தையோ அணுகி புகாரளிக்கலாம்.

அதனை விடுத்து இதுபோன்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சுய விளம்பரம் என்று மட்டுமே பார்க்கப்படும். அதே நேரம், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை அவர்களையுடைய அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பதோ, அதிலும் குறிப்பாக 18 வயதுக்கு உட்பட சிறுவர், சிறுமிகளை வீடியோ எடுப்பதோ சட்டப்படி குற்றம் என்கின்றனர் போலீசார்.

 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement