செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வேடந்தாங்கல் விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் சார்பில் குழு

Jun 29, 2020 06:03:18 PM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகிலுள்ள சன் பார்மா நிறுவனத்தினால் அங்குள்ள ஏரி மற்றும் அதனை சுற்றி உள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

சன் பார்மா நிறுவனம் எந்தவித சட்டப்படியான அனுமதியும் இன்றி சரணாலயதின் மைய பகுதிக்கு மிக அருகில் இயங்குவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் செல்வராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில்,  சுற்றுச்சூழல் துறை தடையில்லா சான்று, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி சான்று உள்ளிட்ட எந்த  அனுமதியும் இன்றி சன் பார்மா இயங்குவதாக கூறப்பட்டிருந்தது.

சன் பார்மாவில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி, மற்றும் அருகில் இருக்க கூடிய நீர்நிலைகள், விவசாய நிலங்களில் கலந்து மாசு ஏற்படுத்துவதாகவும், இதனால்  பறவைகள் பாதிக்கப்படுவதாகவும் முறையிடப்பட்டிருந்தது.

இதனை கட்டுப்படுத்தி வேடந்தாங்கல் சரணாலயத்தை பாதுகாக்க நிரந்தரமாக குழு அமைக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதித்துறை மற்றும் வல்லுநர் குழு உறுப்பினர்கள் அமர்வு, சன் பார்மா நிறுவனம் முறையான சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று இயங்குகின்றதா?, நிறுவனத்தில் இருந்து வெளியாகும் மாசுவை கட்டுப்படுத்த போதுமான வசதிகள் உள்ளனவா? சட்டத்துக்கு புறம்பாக கழிவு நீர் விவசாய நிலங்களிலும், நீர்நிலைகளிலும் வெளியேற்ற படுகிறதா? அப்படியெனில், இதனால் நீர் மற்றும் மண்ணின் தரம் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு செய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கை மற்றும் விதி மீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் இழப்பீடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய குழு அமைத்து உத்தரவிட்டனர்.

இக்குழுவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறையின் மூத்த மண்டல அதிகாரி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த மண்டல அதிகாரி, வன உயிர் அதிகாரி, தமிழ்நாடு வன உயிரியல் மற்றும் சரணாலயம் துறை அதிகாரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அறிவியலாளர் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement