செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வங்கதேசத்தை உருவாக்கியவர்; மெட்ராஸ் ரெஜிமென்டை நேசித்தவர்!- காலத்தை வென்ற ஜெனரல் சாம் மானக்ஷா

Jun 28, 2020 10:02:55 AM


கடந்த 1971- ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரில் , வங்கதேசம் என்ற புதிய நாட்டை 13 நாள்களில் உருவாக்கிய பீல்டு மார்ஷல் ஜெனரல் சாம் மானக்ஷாவின் 12-வது நினைவு தினத்தை முன்னிட்டு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும்  Defence Services Staff College அதிகாரிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

இந்திய ராணுவத்தில் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்றவர்கள் இரண்டே பேர் மட்டுமே. ஒருவர் ஜெனரல் கரியப்பா , மற்றோருவர் ஜெனரல் சாம் மானக்ஷா. 1969 - ம் ஆண்டு இந்திய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற சாம் மானக்ஷாவின் தலைமையில்தான் 1971 - ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டது. முடிவில், வங்கதேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது. 1972- ம் ஆண்டு இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது. நாட்டுக்கும் ராணுவத்துக்கும் சாம்மானக்ஷா ஆற்றிய சேவையை பாராட்டி 1973-ம் ஆண்டு ஜனவரி 15- ந் தேதி அவருக்கு பீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஓய்வுக்கு பிறகு குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் சாம் மானக்ஷா வசித்தார். மெட்ராஜ் ரெஜிமென்டை மிகவும் நேசித்த காரணத்தினால், தன் கடைசி காலத்தை இங்கேயே அவர் கழித்தார். கடந்த 2008- ம் ஆண்டு ஜூன் 27- ந் தேதி சாம் மானக்ஷா இறந்தார். இன்று அவரின் 12-வது நினைவு தினம் ஆகும்.

பஞ்சாப்பில் உள்ள அம்ரிஸ்தரில் 1914-ம் ஆண்டு ஏப்ரல் 3- ந் தேதி பிறந்த சாம் மானக்ஷா, பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்ற முதல் ராணுவத் தளபதி ஆவார். 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய சாம் மானக்ஷா, இரண்டாவது உலகப் போர், 1947 -இந்தியா -பாகிஸ்தான் போர், 1965 -இந்தியா- சீனா , 1965 -இந்தியா- பாகிஸ்தான் 1971- இந்தியா- பாகிஸ்தான் போர் ஆகிய ஐந்து பெரும் போர்களில் பங்கேற்றவர். 1942-ம் ஆண்டு பர்மாவில் ஜப்பானிய படைகளுடன் போரிட்ட போது, அவரின் உடலில் 9 குண்டுகள் பாய்ந்து அதிசயமாய் உயிர் பிழைத்தவர் சாம் மானக்ஷா. 


சாம்மானக்ஷாவின் நிகைவு தினத்தை முன்னிட்யட Defence Services Staff College கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.வி.கே மோகன், உதகமண்டலத்தில் உள்ள பார்சி ஜோராஸ்ட்ரியன் அமைந்துள்ள சாம் மானக்ஷாவின் கல்லறையில் மரியாதை செலுத்தினார்.

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement