செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கரையொதுங்கிய போதைப் பொருள் மதிப்பு ரூ.300 கோடி என தகவல்

Jun 21, 2020 07:48:51 PM

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கொக்கில மேடு கடலோரத்தில் கரையொதுங்கிய போதைப் பொருளின் சந்தை மதிப்பு 250 முதல் 300 கோடி ரூபாய் என்றும், சந்தை மதிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடும் என்பதால் ஆயிரம் கோடி ரூபாய் வரை விலைபோகக் கூடியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட தகர டிரம் உருளை மிதந்து வந்து கரை ஒதுங்கியுள்ளது. அதில் ஆயில் அல்லது டீசல் இருக்கக் கூடும் என மீனவர்கள் அதனை உடைத்துப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதில் “ரீபைன்ட் சைனீஸ் டீ” என சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட தலா 1 கிலோ எடையுள்ள 78 பொட்டலங்கள் இருந்துள்ளன.

இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்று அதனை சோதனையிட்ட மாமல்லபுரம் போலீசார் போதைப் பொருளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைத்தனர்.

சோதனையில் அது ஹெராயின் வகையைச் சேர்ந்த மெதாம்பெட்டமைன் என்ற, மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் சக்திவாய்ந்த போதைப் பொருள் என தெரிய வந்துள்ளது. 

இந்த போதைப் பொருள் மியான்மர் நாட்டிலிருந்து வந்திருக்கக்கூடும் என போதை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சர்வ தேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் எப்படி கடலில் மிதந்து வந்தது என போதை தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் யாராவது படலில் வந்து போதைப் பொருள் டிரம்மை கடலில் வீசிவிட்டுச் சென்றனரா? சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறர்களா? அல்லது மர்ம படகில் கடலில் உலாவுகின்றனரா? என ஆய்வு செய்தனர்.

படகு மூலம் கடத்தப்படும்போது தவறி விழுந்ததா? படகு உடைந்து அதிலிருந்து வெளியேறியதா? கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் இருந்தபோது அவர்களிடம் சிக்காமல் இருக்க கடலில் வீசப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement