செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் தீவிர முயற்சியில் கேரளா... கோவை மண்டலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Jun 16, 2020 10:51:58 AM

கொரோனா ஊரடங்கைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கேரள அரசு,  சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் மூலம் 2.87 டிஎம்சி தண்ணீரை 4255 ஹெக்டேர் தரிசு நிலம், தொழில் நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கேரள அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது கேரள அரசு. இந்தத் திட்டம் மூலம் கோவை மண்டலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

கோவை மண்டலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானி நதியின் கிளை நதியான சிறுவாணி. கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாகப் பாய்ந்து தமிழகத்தின் கூடுதுறை எனுமிடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது.



சிறுவாணி ஆற்றுக்குக் குறுக்கே அட்டப்பாடி வனப் பகுதியில் அணை கட்ட பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது கேரளா அரசு. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு மற்றும் பொது மக்களின் எதிர்ப்பையடுத்து இந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிறுவாணி ஆற்றுக்குக் குறுக்கே 450 மீட்டர் அகலம், 52 மீட்டர் உயரத்தில் இந்த அணை அமைக்கப்படுகிறது. 74.27 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் கைப்பற்றப்பட்டு இதற்கு மாற்றாக வேறு இடத்தில் நிலம் வழங்கவிருக்கிறது. 294 ஹெக்டேர் தனியார் நிலங்கள் ஏற்கெனவே கைப்பற்றப்பட்டுவிட்டன. கேரள அரசின் இந்தத் திட்டம் மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் சிறுவாணி ஆற்று நீர் முழுவதையும் கேரளாவே பயன்படுத்திக்கொள்ளும் நிலை ஏற்படும். கோவை மண்டலத்தில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும்.



கடந்த மாதத்தில், சிறுவாணி அணையில் 'இன்டேக் டவர்' அருகே உள்ள குழாயை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுவாணி ஆறு உற்பத்தியாகும் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டத்துக்குச்  சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள், காலநிலை மாற்றம்  அமைச்சகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்குள்ளாகவே கேரள அரசு அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கேரள அரசின் அணைக்கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது...

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement