செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

போலி சித்த வைத்தியர் திருதணிகாசலம் மேலும் இரண்டு வழக்குகளில் மீண்டும் கைது

May 19, 2020 04:41:47 PM

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்ட, போலி சித்த மருத்துவர் திருதணிகாசலம் அளித்த மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.

தணிகாசலத்தை ஜாமீனில் விடுவித்தால் போலி மருத்துவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்து விடும் என கூறி எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட்டு வந்த போலி சித்த மருத்துவர் திருதணிகாசலத்தை, கடந்த 6ம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கொரோனா தடுப்பு மருந்து எனக் கூறி தனது மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு அவர் வழங்கி வந்த மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினர்.

இந்நிலையில் சித்த வைத்தியர் எனக் கூறி அவர் கொடுத்த மருந்து, மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட 3 பேர் புகாரளித்துள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் குறைபாட்டிற்கு நீண்ட நாட்களாக மருந்து கொடுத்து பணம் பறித்த நிலையில், அதனை உட்கொண்ட குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெண்புள்ளிகள் குறைபாட்டிற்கு அவர் அளித்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு புகாரும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக மோசடி, நம்பிக்கை மோசடி, மருத்துவர் என கூறி ஏமாற்றியதால் இந்திய மருந்துவ கவுன்சில் சட்டம் ஆகியவற்றின் கீழ் தனித்தனியாக இருவேறு வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், திருதணிகாசலத்தை மீண்டும் கைது செய்துள்ளனர். இந்த 2 வழக்குகளிலும் அவரை அடுத்த மாதம் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனிடையே ஜாமீன் கோரி திருதணிகாசலம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை, திருதணிகாசலம் தனது வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலே சிகிச்சை அளித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் அவரை ஜாமீனில் விடுவித்தால் இதேபோன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்து விடும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement