நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் சண்முகத்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 25 லட்ச ரூபாய் வழங்குவதாக என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அங்கு கடந்த 7ஆம் தேதி பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். அதில் சர்புதீன் என்ற நிரந்தர தொழிலாளியும் சண்முகம் என்ற ஒப்பந்த தொழிலாளியும் உயிரிழந்தனர். ஒப்பந்த தொழிலாளி என்பதால், அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் அனல்மின் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் சண்முகத்தின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் என்.எல்.சி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.