செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி : உலுக்கும் கொரோனாவால் தவிக்கும் தமிழகம்

May 09, 2020 08:58:51 PM

தமிழகத்தில் 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 4 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளதால், வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 

உலுக்கும் கொரோனாவால் மிரளும் தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக வைரஸ் தொற்றால் உறுதி ஆனோர் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்தது.

வைரஸ் தொற்றால் உறுதி ஆனவர்களில் 4 ஆயிரத்து 664 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 ஆயிரத்து 248 பேர் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில் 4 பேரை கொரோனா காவு வாங்கி விட்டதால், உயிர்ப்பலி 44  ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 219 பேர் குணமடைய , இதுவரை ஆயிரத்து 824 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 67 வயது பெண் ஒருவர், சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயது பெண்,
சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், சென்னையை சேர்ந்த 58 வயது மற்றொரு பெண், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மரணம் அடைந்தனர். சென்னையை சேர்ந்த 73 வயது பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா காவு வாங்கிய 44 பேரில், 27 பேர் சென்னையை சேர்ந்த வர்கள். செங்கல்பட்டில் 3 பேரும், மதுரை மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும் உயிரிழந்தனர். கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சி, ராமநாதபுரம், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பலி ஆகி உள்ளனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement