செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

May 09, 2020 12:47:19 PM

மின்சார சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஆட்சேபணைகள் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த முயற்சியை நிறுத்திவைக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில மின்துறையின் சுயேச்சையான செயல்பாட்டின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் தமிழக அரசின் மிகவும் கவலைக்குரிய அம்சங்கள் குறித்து சுட்டிக்காட்ட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரைவு மசோதா, மின்விநியோகத்தையும், ஒட்டுமொத்த மின்விநியோக கட்டமைப்பையும் தனியார்மயமாக்க முயற்சிப்பதாகவும், இது மாநில அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு பொது நலனுக்கு எதிரானது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

கடுமையான ஆட்சேபணைக்குப் பிறகும், மின்நுகர்வோருக்கு குறிப்பாக விவசாயத்துறை மின்நுகர்வோருக்கு மானியத்தை நேரடியாக வழங்கும் பிரிவு வரைவு மசோதாவில் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரடி மானியத் திட்டம், விவசாயிகள் மற்றும் வீட்டுப் பயனாளர்களின் நலன்களுக்கு எதிரானது என கடந்த 2018ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் தொடர்ந்து இலவச மின்சாரத்தை பெற வேண்டும் என்பதும், மானியத்தை எந்த வடிவில் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதும், தமிழக அரசின் திட்டவட்டமான கொள்கை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கும் மாநில அரசின் அதிகாரத்தையும் பறிப்பதாக வரைவு மசோதா உள்ளது என்றும், இது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் முதலமைச்சர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

தற்போது மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மூழ்கியுள்ள நிலையில், திருத்தங்கள் குறித்து விரிவான கருத்துகளை தெரிவிக்க காலஅவகாசம் தேவை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதேசமயம், மின்சாரச் சட்டத்தில் அவசரப்பட்டு திருத்தங்கள் செய்வது, ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசின் மின்னுற்பத்தி மற்றும் விநியோக அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement