செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: 200க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ்..!

Apr 18, 2020 06:17:50 AM

தமிழ்நாட்டில், மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், அந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1323 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில், பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத்துறை, செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 31 பேர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 78,349 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

23 ஆயிரத்து 934 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், தொற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வழியே பயணித்தவர்கள் என்ற அடிப்படையில், 34 பேர் அரசின் தனிமை முகாம்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், 29,673 கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 56 பேருக்கு, பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1323ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அறிகுறி, பாதிப்பு உள்ளிட்டவற்றுடன், மருத்துவமனைகளின் தனி வார்டுகளில், 1,891 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதுமில்லாத நிலையில்,சிகிச்சைக்குப் பின், ஒரே நாளில், 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து, பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 283ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, கரூரில், 51 பேரும், திருச்சியில் 33 பேரும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்ட அளவில், தஞ்சாவூரில் ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்திருப்பதோடு, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement