கொரோனா பாதிப்புக்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் நமக்காக உழைப்போருக்கு நாமும் ஒத்துழைப்போம் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும் விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு என்பதையும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.