செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விழிப்புடன் இருப்போம் : கொரோனாவை வெல்வோம் நோயற்ற தமிழகம் மலர அழைப்பு..!

Mar 20, 2020 11:33:34 AM

தமிழகம் முழுவதும் ஏசி வசதி கொண்ட பெரிய ஜவுளி கடைகள், பெரிய நகைக்கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகள் அனைத்தையும் இன்று முதல் மூட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை - தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி முதலமைச்சர் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் குறித்து, செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவமனை உடனடியாக ஏற்படுத்தப்படும். வார சந்தைகள், வருகிற 31 ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏசி வசதி கொண்ட பெரிய ஜவுளி கடைகள், பெரியநகைக்கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட மக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகள் அனைத்தையும் வெள்ளிக்கிழமை முதல் மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள், காய்- கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து ஊழியர்களை பணியாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சிறு - குறுந் தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பெரிய கோவில்களில் வருகிற 31 ம் தேதி வரை
பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆகம பூஜைகளுக்கு எந்த தடையும் இல்லை. அனைத்து கால பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும். தேவாலயங்கள், மசூதிகளுக்கு வருபவர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரெயில்,பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள், முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு பணியில்,தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா வைரஸ் நோயினை வென்று, நோயற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement