செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தீயாய் பரவும் கொரோனா.. மாஸ்க்கை தொடர்ந்து Sanitizer-களுக்கு தட்டுப்பாடு.!

Mar 10, 2020 02:20:50 PM

கொரோனா வைரஸ் பீதி உலகை ஆட்டி படைத்து வருகிறது. அங்கே சுற்றி இங்கே சுற்றி இந்தியாவிலும் சற்று வலுவாக தடம் பதித்துள்ளது கொரோனா. இதுவரை நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்டோருக்கும் , தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தாக்காமல் தப்பிக்க முகத்தில் மாஸ்க் அணிவதுடன் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து கொரோனா பீதியில் உள்ள நாட்டு மக்கள், வைரஸ் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மாஸ்க் வாங்குவதற்கும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் சானிட்டைசர் (hand sanitizer) வாங்குவதற்கும் கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.

சோப்புகள், ஹேண்ட் வாஷ்களோடு ஒப்பிடும் போது Hand Sanitizer-கள் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மை அதிகம் பாதுகாப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் Hand Sanitizer-களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது நம் நாட்டிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் சானிடைசரின் தேவை அதிகரித்து வருகிறது. கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து மக்களின் கவனம் கிருமி நாசினிகள் பக்கம் திரும்பியுள்ளதால் ஃபேஸ் மாஸ்க்கிற்கு அடுத்தபடியாக Sanitizer-களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல நிறுவனங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பயன்படுத்தப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலக வாயில்களிலேயே Hand Sanitizer பொருத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் அதனை கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பயோ மெட்ரிக் மெஷினை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்னும் சிலரோ எங்கு சென்றாலும் கூடவே Hand Sanitizer பாட்டிலை பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்து கையோடு எடுத்து சென்று பயன்படுத்தி வருகின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் கிருமி நாசினியின் விலையும் உயர்ந்துள்ளது. கடைகளில் மட்டுமல்ல ஆன்லைனில் விற்கப்பட்டு வந்த சில முன்னணி நிறுவனங்களின் Sanitizer-களும் பல மடங்கு விலை உயர்த்தி விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

லட்சக்கணக்கான மக்கள் பஸ்கள், ரயில்கள் என பொது போக்குவரத்தை பயன்படுத்தி அன்றாட பணிகளுக்கும் இன்னபிற வேலைகளுக்கும் சென்று வருவதால் எளிதில் கொரோனா தாக்க கூடிய அபாயம் இருப்பதாக உணர்கின்றனர். எனவே கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள் ஃபேஸ் மாஸ்க் மற்றும் கிருமி நாசினியான Sanitizer-களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர்.

பொது மக்கள் 3 முதல் 5 Sanitizer Bottle-களையும், அலுவலகங்களாக இருக்கும்பட்சத்தில் 50 முதல் 100 Sanitizer Bottle-களையும் ஒரே சமயத்தில் வாங்கி செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு Sanitizer Bottle வாங்கி சென்றாலே போதுமானது. ஆனால் தேவைப்படும்போது கடைகளில் Stock இருக்காதோ என்றெண்ணி அதிக Sanitizer Bottle-களை வாங்கி செல்கின்றனர் என குறிப்பிட்டுள்ளனர் கடைக்காரர்கள்.

இதுகுறித்து கூறியுள்ள மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேபோல விமான நிலையங்களில் கொரோனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் Sanitizer மற்றும் Face Mask-குகளை பயன்படுத்துவது அவசியம். மக்கள் இவற்றை பரவலாக பயன்படுத்தும் அளவிற்கு நிலைமை கை மீறி செல்லவில்லை. எனவே இவற்றை அதிக அளவில் வாங்குவதை மக்கள் தவிர்த்தாலே தட்டுப்பாடும் குறையும், விலையும் குறையும் என கூறி உள்ளார்.


Advertisement
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement