செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவலர் தேர்வை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவு ரத்து

Mar 03, 2020 06:54:25 PM

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறைகளை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தியது. இதில், வேலூரில் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் சிகரம் தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்றும் புகார் எழுந்தது.

முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டார்.

தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னரும், அரசின் விளக்கத்தை கேட்காமலும், தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. ஒரே தேர்வு மையத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றார்கள் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இத்தகைய குற்றச்சாட்டு பொத்தம் பொதுவாகக் கூறப்படுவதாகவும், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தனி நீதிபதி தேர்வு நடவடிக்கையை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அவர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தேர்வு முறைகேடு குறித்து ஆவணங்களை ஆராயாமல் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் உத்தரவு தவறு என்றும், இது தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைத்ததற்கு எந்த காரணத்தையும் தனி நீதிபதி தன்னுடைய உத்தரவில் விளக்கவில்லை என்பதையும் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கில் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், தமிழக அரசின் மேல் முறையீட்டை அனுமதிப்பதாகவும், தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் ஆணையை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டனர். மூல வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு, மேல் முறையீட்டு வழக்கை முடித்துவைத்தனர்.


Advertisement
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
டெங்குவால் 7பேர் உயிரிழப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை
கே.ஆர்.பி. அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்.. தொடர் மழையால் முழுக்கொள்ளளவை எட்டவுள்ள அணை..
குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் தொழில் செய்ய நலத்திட்டம் 30பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் வழங்கி உதவி..
மளிகைக் கடையில் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் தகராறு..
விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement