செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அமலுக்கு வரும் புதிய எஃப்சி விதிகள்

Feb 17, 2020 03:42:33 PM

வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும், 8 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கான எஃப்சி-யை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி இந்த வாரத்தில் அமலுக்கு வருகிறது. 

டிரக்குகள், வாடகைக் கார்கள் உள்ளிட்ட வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால் ஓராண்டுக்கு ஒருமுறை எஃப்சி எனப்படும் தகுதிச்சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். அதுவே, 8 ஆண்டுகளுக்குள் இருந்தால், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது.

8 ஆண்டுகளுக்குள் இருந்தாலும் ஓராண்டுக்கு ஒருமுறை எஃப்சி-யை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையை புதிய விதி மாற்றியமைக்கிறது. இதை 2 ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கும் திட்டத்தை மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் 2018ஆம் ஆண்டிலேயே முன்மொழிந்தது. இதை மற்ற மாநிலங்கள் அனைத்தும் செயல்படுத்திவிட்ட நிலையில், கடைசியாக தமிழ்நாடு செயல்படுத்துகிறது.

வாகன வல்லுநர்களை பொறுத்தவரை பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இது தேவையற்ற நடவடிக்கை என்று கூறுகின்றனர். வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்குள் இருந்தாலும் ஓராண்டுக்கு ஒருமுறை எஃப்சி புதுப்பிப்பதே சரி என வாகன வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், லாரிகளை இயக்கும் உரிமையாளர்கள் இந்த புதிய விதியை வரவேற்கின்றனர். இதன் மூலம் டிரக் ஒன்றுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகும் என தெரிவிக்கின்றனர். மேலும் புதிய விதி 8 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சம் தேவையற்றது என அவர்கள் கூறியுள்ளனர்.

புது வாகனங்கள் என்பதால் தேய்மானமும் பழுதும் குறைவாகவே இருக்கும் என்ற அடிப்படையில் லாரி, வாடகை கார் உரிமையாளர்கள் இந்த கருத்தை தெரிவிக்கின்றனர். இருப்பினும், அரசுப் பேருந்துகளை இதில் சேர்க்கக் கூடாது என்றும், 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசுப் பேருந்துகளுக்கு எஃப்சி-யை புதுப்பிக்கும் நிலை தொடர வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வாகன விபத்துகள் தொடர்பான புள்ளிவிவரங்களை பார்க்கும்போது புதிய வாகனங்களை அதிக விபத்தை ஏற்படுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 2018ஆம் ஆண்டில், மொத்தம் ஏற்பட்ட 63 ஆயிரத்து 900 விபத்துகளில் 38 சதவீத விபத்துகளை ஏற்படுத்தியது 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்கள் எனக் கூறப்படுகிறது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement